#JUSTIN; கடலூர் அருகே பழைய அரசு கட்டிடம் இடிந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கடலூர் அருகே வண்டி குப்பம் பகுதியில் அரசு கட்டிடம் இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் வண்டிக்குப்பம் பகுதியில் சமத்துவபுரம் அருகே இலங்கை அகதிகளுக்காக கட்டப்பட்ட பழைய அரசு கட்டிடத்தின் அருகில் சிறுவர்கள் அமர்ந்துள்ளனர். அப்போது திடீரென சேதமடைந்த பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதனை அடுத்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், இடிபாடுகளில் சிக்கிய ஒருவரை உயிருடன் மீட்டுள்ளனர்.

இலங்கை அகதிகளுக்காக கட்டப்பட்ட அரசு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் உயிரழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Samathuvapuram govt building clash


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->