கொட்டித் தீர்க்கும் மழை - இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இருப்பினும் மழையின் அளவு குறைவாக இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. 

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்தக் கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்  பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல், சிவகங்கையிலும் மழை பெய்துவரும் நிலையில், அந்த மாவட்டத்தில் மழை பெய்யும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school leave in thajnavur district for rain


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->