பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்.. மாணவி எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


விருத்தாசலத்தில் பள்ளியின் மாடியிலிருந்து மாணவி கீழே குதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவி திடீரென மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது குறித்து மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிகிச்சை பெற்றுவரும் மாணவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் மாணவி தன்னிடம் ஆசிரியர் சாமிநாதன் ஆபாச வார்த்தைகளைப் பேசி, ஒரு மாத காலமாக பாலியல் தொல்லை செய்து வந்ததாக கூறியுள்ளார். இதனால் மனமுடைந்து போன மாணவி தற்கொலை முயற்சி செய்து கொண்டேன் என காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School teacher sexual Harrasment for student


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->