இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 21 பேர் இன்று கைது! - Seithipunal
Seithipunal


நெடுந்தீவு அருகே, மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 21 பேரை  இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருவது வாடிக்கையாகி வரும்  நிலையில், இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தும், இதை தடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைபட்டினத்தில் இருந்து 4 விசைப்படகுகளில் 21 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். தொடர்ந்து நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 21 பேரையும் இன்று கைது செய்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர், அங்கு விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Serial atrocity of sri lankan navy 21 tamilnadu fishermen arrested today


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->