மக்களவை தேர்தலில் ஸ்டாலினின் பங்கு பெரிய அளவில் இருக்கும் என சீதாராம் யெச்சூரி கருத்து.! - Seithipunal
Seithipunal


அடுத்து வரக்கூடிய மக்களவை தேர்தலில் புதிய அரசு அமைவதில் ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு இருக்கும் என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது கூட்டத்தில் சீதாராம் யெச்சூரி பேசுகையில், 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் புதிய அணி உருவாகி மத்தியில் புதிய ஆட்சி அமையும் என்று தெரிவித்தார். 

மேலும் மத்தியில் மதசார்பற்ற அரசு அமைவதில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு இருக்கும் என்றும், இதற்காக பாரதிய ஜனதா அல்லாத மாநிலங்களின் முதல்வர்களை ஸ்டாலின் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sitaram yechury speech


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->