சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் ஜப்தி உத்தரவு ரத்து – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
Sivaji Ganesan House Chennai High Court
தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகர் சிவாஜி கணேசனின் தி.நகர் அன்னை இல்லம் தொடர்பான வழக்கில், அதன் ஜப்தி உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ரூ.9 கோடி கடனை அடிப்படையாகக் கொண்டு, கடந்த காலத்தில் இந்த வீடு ஜப்தி செய்யப்பட்டது. ஆனால், நடிகர் பிரபு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், *அன்னை இல்லம் முழுமையாக நடிகர் பிரபுவின் சொத்து* என உறுதிசெய்தது.
மேலும், பதிவு அலுவலகத்தில் ஏற்பட்ட தவறான பதிவின் அடிப்படையில் ஜப்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அந்த உத்தரவை நீக்க வேண்டும் எனவும், பதிவுத்துறைக்கு சரியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இதற்கிடையே, சிவாஜி கணேசனின் மற்றொரு மகனான துஷ்யந்தின் தந்தை ராம்குமார், “இந்த வீட்டில் எனக்கு உரிமை இல்லை” என எழுதியுள்ள சுயபிரமாண பத்திரமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இந்த சொத்தின் உரிமை தொடர்பான எந்தவொரு சந்தேகமும் இல்லை என உறுதி செய்த நீதிமன்றம், ஜப்தியை ரத்து செய்து, பதிவு அலுவலகம் அவ்வாறு பதிவு செய்ய வேண்டும் எனத் தெளிவாக உத்தரவிட்டது.
English Summary
Sivaji Ganesan House Chennai High Court