தீபாவளிக்கு சென்னையிலிருந்து காரில் சொந்த ஊருக்கு செல்பவர்கள் கவனத்திற்கு! - Seithipunal
Seithipunal


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து, காரில் சொந்த ஊர் செல்வோர், தாம்பரம்-பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

சென்னையிலிருந்து திருப்போரூர்-செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்ல வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுரை வழங்கியருக்கிறார்.

மேலும், அக்.31-ந்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து 14,016 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

அக்.28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 14,016 பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், சென்னையில் இருந்து 11,176 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

கடந்தாண்டு 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

கிளாம்பாக்கத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் , திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். 

கோயம்பேட்டில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

மாதவரத்தில் இருக்கிற புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், வழக்கமாக திருச்சி, சேலம் மற்றும் கும்பகோணம், திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் பேருந்துகளும் இயக்கப்படும். 

இந்த சிறப்பு பேருந்து சேவைகள் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு 9445014436 என்ற எண்ணில் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 
18004256151, 
04424749002, 
04426280445, 
04426281611 ஆகிய எண்களில் பயணிகள் புகார் அளிக்கலாம் என்றும் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 Special Bus Deepavali 2024 Chennai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->