மின்சார ரெயில்கள் ரத்து - சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


சென்னை - கடற்கரை மற்றும் எழும்பூருக்கு இடையேயான நான்காவது ரெயில் பாதை அமைக்கும் பணி காரணமாக, நாளை காலை 5:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை கடற்கரை - எழும்பூர் இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. 

இதன் காரணமாக, தாம்பரம் - கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே காலை 05:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை பகுதியளவு ரத்து செய்யப்படுகின்றன. 

இந்தப் பனி நிறைவடைந்தவுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை 4:10 மணி முதல் மின்சார ரயில் சேவைகள் வழக்கம் போல் மீண்டும் தொடங்கும் என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மின்சார ரெயில் ரத்து செய்யப்படுவதன் காரணமாக, போக்குவரத்து கழகம் சார்பில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 

அதாவது, பிராட்வே - தாம்பரம் இடையே 25 சிறப்பு பேருந்துகளும், பிராட்வே - கிளாம்பாக்கம் இடையே 20 சிறப்பு பேருந்துகளும் பல்லாவரம் - செங்கல்பட்டு இடையே 5 சிறப்பு பேருந்துகள் என்று மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

special bus run in chennai for electric train cancelled


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->