இரவு நேரங்களில் வீட்டின் மீது மர்மமான முறையில் விழும் கற்கள்! பேய்யா ? ஆசாமியா ? மக்கள் அச்சம்! - Seithipunal
Seithipunal


திருப்பூர் அருகே உள்ளே ஓட்டப்பாளையம் கிராமத்தில் வீடுகளில் மீது மர்மமான முறையில் இரவில் கற்கள் விழுவதாகவும், மர்ம நபர்களை கண்டுபிடிக்க கோரியும் ஊர் மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஒட்ட பாளையம் பகுதி மதுரை வீரன் கோவில் அருகே உள்ள காலணி பகுதியில் இரவு முதல் 2 மணி வரை மர்மமான முறையில் வீட்டின் மீது கற்கள் வீவதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் உள்ள  குழந்தைகள் முதல் முதியவர்கள் வரவில் இரவில் தூங்க முடியாமல் அச்சத்தில் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

இரவு நேரங்களில் வீட்டின் மேல் கற்களை வீசி மக்களை அச்சுறுத்தி திசை திருப்பி கொள்ளைகும்பல் திருட முயற்சிக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் தெரிவித்ததாவது, தினமும் இரவில் 7 மணி முதல் 2 மணி வரை வீட்டில் மேல் கற்களை வீசுகிறார்கள். வெளியே வந்து பார்த்தால் கற்கள் விழவில்லை. வீட்டிற்குள் சென்றதும் கற்கள் விழுகிறது.

இதனால் குழந்தைகள் வெளியே செல்ல முடியவில்லை பெண்கள் வெளியில் செல்ல முடியவில்லை என அச்சத்தில் இருப்பதாக கூறி உள்ளனர். இரவில் கற்களை வீசுவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக அப்பொழுது இளைஞர்கள் இரவு முழுவதும் பார்வையிட்டனர். ஆனாலும் மர்ம நபர்கள் யார் என கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், அப்பகுதி மக்கள் வீடுகள் மேல் இரவுகளில் கற்கள் வீசப்படுவதாக மர்மநபர்களை கண்டுபிடிக்க கோரியும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stones falling mysteriously on the house at night


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->