போக்சோவில் கைது!!! சீருடை அளவெடுத்து டைலர்கள் மற்றும் ஆசிரியை...!!! நடந்தது என்ன?
tailors who measured uniforms and teacher Arrested POCSO
மதுரையில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், பள்ளி மாணவி ஒருவர் பாலியல் சீண்டல் காரணமாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் மாணவி கூறியிருந்ததாவது,"நான் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். பள்ளி சீருடைக்கு அளவெடுப்பதற்காக ஒரு ஆண் டெய்லரும், பெண் டெய்லரும் பள்ளிக்கு வந்தனர்.

அவர்களிடம் அளவு எடுப்பதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இதுதொடர்பாக வகுப்பு ஆசிரியையிடம் தெரிவித்தேன். ஆனால், அவர் கண்டிப்பாக சீருடைக்கு அளவெடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதுபற்றி பள்ளி நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்தேன். அவர்களும் அது பற்றி கண்டுகொள்ளவில்லை.பள்ளிக்கு வந்த ஆண் டெய்லர் அளவெடுத்தபோது என்னிடம் அத்துமீறினார். உடல் பாகங்களை தொட்டு, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். எனவே, அவர் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் கவிதா:
இந்த சம்பவம் குறித்து காவலர் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தினார்.இதில், பள்ளிக்கு வந்து சீருடைக்காக அளவெடுத்தபோது மாணவியிடம் அத்துமீறியதாக 60 வயதுடைய டெய்லர் மற்றும் அவரது சகோதரியான மற்றொரு டெய்லர், இதற்கு உடந்தையாக இருந்ததாக ஆசிரியை ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவலர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து மாணவியிடமும், அந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தினர்.இந்நிலையில் மாணவிகளுக்கு சீருடை அளவெடுத்த விவகாரம் தொடர்பாக 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 டெய்லர்கள், அளவெடுக்க வைத்த ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மாணவி அளித்த புகாரின் பேரில் டெய்லர்கள் பாரதி மோகன், கலாதேவி, மாணவியை கட்டாயப்படுத்தியதாக ஆசிரியை சாராவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இது தற்போது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
tailors who measured uniforms and teacher Arrested POCSO