தமிழகத்தில் நடந்த தேர்தலில் ஹவாலா பணப்பட்டுவாடா? விரிவடையும் விசாரணை!
Tambaram Hawala money
நாடாளுமன்ற தேர்தலில் ஹவாலா பணப்பட்டுவாடா? என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மக்களவை தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் ஹவாலா பணப்பட்டுவாடா? நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.4 கோடி பணம் மட்டுமல்லாது பல கோடி ரூபாய் பணம் ஹவாலா முறையில் பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஹவாலா தரகர்கள் மூலமாக எந்தெந்த அரசியல் பிரமுகர்களுக்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.