இரவு 7 மணி வரை கவனம்! தமிழகத்தின் 34 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள்.

கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் இரவு 7 மணிவரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

மேலும், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்களில் 11ம் தேதி மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் 12ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu weather report rain alert


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->