இன்றும், நாளையும் ஆரஞ்சு அலெர்ட்! 8 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! - Seithipunal
Seithipunal


நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு (ஆரஞ்சு அலெர்ட்) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு (ஆரஞ்சு அலெர்ட்) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும் நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தேனி, மதுரை, விருதுநகர், கோவை, தூத்துக்குடி உள்ளிட்டட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 18-ஆம் தேதி நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தேனி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும், வருகின்ற ஆகஸ்ட் 19 முதல் 22 ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Weather Report Rain Alert today 16 08 2024


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->