பொதுநலனுக்கா? டாஸ்மாக் அதிகாரிகளுக்கா? தமிழக அரசை வெளுத்து வாங்கிய உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மார்ச் 6 முதல் 8 வரை நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சோதனையின் போது பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

சோதனை சட்டவிரோதம் என்றும், அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கையைத் தடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

மத்திய அமலாக்கத்துறை, இந்த வழக்கில் பதிலளித்து மனுவும் தாக்கல் செய்தது. அதற்கு பதிலளிக்க அரசு கால அவகாசம் கேட்டது. இதனையடுத்து, வழக்கு மீண்டும் ஏப்ரல் 8 மற்றும் 9 தேதிகளில் விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையில் அரசு, வழக்கு தள்ளிவைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தது. காரணமாக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுவை தாக்கல் செய்திருப்பதை தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்காத நீதிபதிகள், அரசின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்தனர்.

“இந்த வழக்கு பொதுநலனுக்கா? டாஸ்மாக் அதிகாரிகளுக்கா?” எனக் கேள்வி எழுப்பிய அவர்கள், “உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவதற்கு முன், இதைப் பற்றி இந்த நீதிமன்றத்தில் ஏன் தெரியப்படுத்தவில்லை?” என சாடினர்.

அரசு தரப்பில், பதிலுரை கடந்த ஞாயிறு இரவு தான் கிடைத்ததாகவும், அதன்பின் நிலைமாற்றம் ஏற்பட்டதாகவும் விளக்கம் தரப்பட்டது. விசாரணை பிற்பகல் 2.15க்கு ஒத்திவைக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tasmac case TN Government Madras High Court


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->