திருச்சி அருகே பயங்கரம்!...ரயில் பெட்டிகள் கழன்று ஓடிய திக் திக் அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


திருச்சி அருகே சேது எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் கழன்று ஓடிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 


ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு சேது எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. தொடர்ந்து சென்று கொண்டிருந்த ரயிலானது,நள்ளிரவு 1.30 மணிக்கு திருச்சி ரெயில் நிலையம் அருகே வந்தது. 

அப்போது, 23 பெட்டிகளை கொண்ட ரயிலில் இருந்த கடைசி 3 பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள், ரெயிலில் இருந்து கீழே இறங்கி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் கழன்று ஓடிய பெட்டிகளை மீண்டும் இணைத்த பிறகு, சுமார் 20 நிமிடம் தாமதமாக ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrible incident near trichy train carriages fell off


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->