சேலம் || சொந்த ஊருக்கு வரும்போது நேர்ந்த கொடூரம் - விபத்தில் சிக்கி 9 மாத குழந்தை பலி.! - Seithipunal
Seithipunal


வருகின்ற 31ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெளியூர்களில் தங்கியிருக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் இருந்து ஒரு குடும்பத்தினர், சொந்த ஊரான சேலத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அதன் படி அவர்கள் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென தரைப்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஒன்பது மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

மேலும், அந்த குழந்தையின் பெற்றோர்கள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி கொண்டாட ஊருக்கு வரும்போது விபத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nine month baby died accident in salem vazhapadi


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->