நள்ளிரவில் மூன்று சிறுவர்கள் செய்த செயல்..! கிருஷ்ணகிரியில் பரபரப்பு .... நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே இரவில் நடந்து சென்றவரை மூன்று சிறுவர்கள் கல்லால் தாக்கி அவரது செல்போனைப் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரியில் நேற்று நள்ளிரவு உறவினர்களைப் பார்க்க, காஞ்சிபுரத்தைச் சேர்த்த டேவிட்(50), சாலையில் நடந்து சென்ற பொழுது மூன்று பேர்க் கல்லால் தாக்கிய சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சிசிடிவி கேமராவை வைத்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் டேவிட் என்ற நபரை அடித்து அவரிடம் இருந்த செல்போனைப் பறித்துச் சென்றது தெரியவந்துள்ளது. அவர் மூவரையும் கிருஷ்ணகிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படுகாயமடைந்த டேவிட் தற்பொழுது கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இரவு நேரத்தில் நடந்து சென்ற நபரைக் கல்லால் தாக்கி செல்போனைப் பறித்துச் சென்ற சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The incident someone attacking stone stealing phone


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->