அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான், ஜனவரி முதல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 72 வயதான இம்ரான் கான் 2024ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் மனித உரிமைகள் பாதுகாப்பும், ஜனநாயக நிலைநாட்டும் தொடர்பாக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளை நோக்கி அவரது பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை பாகிஸ்தான் உலக கூட்டணியின் உறுப்பினர்களால் செய்யப்பட்டது. இது, நார்வேயில் பதிவு செய்யப்பட்ட அரசியல் அமைப்பான பார்டியட் சென்ட்ரத்துடன் தொடர்புடையதாகும்.

இது தொடர்பாக பார்டியட் சென்ட்ரம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட தகவலில்,

“பாகிஸ்தானில் ஜனநாயகத்திற்காகவும், மனித உரிமைகள் பாதுகாப்பிற்காகவும், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மேற்கொண்ட முயற்சிகளை முன்னிட்டு, அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.”

இம்ரான் கான் 2019-ஆம் ஆண்டிலும் தெற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட எடுத்த முயற்சிகளுக்காக நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pakistans Ex pm imran khan nominated nobel Peace Award


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->