3 வயது சிறுவனை கொன்று சாக்கு மூட்டையில் கட்டிய எதிர்வீட்டுப் பெண்.. நெல்லையில் பயங்கரம்..! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டம் ராதாபுரம் அடுத்து உள்ள ஆத்துக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

காலை முதல் குழந்தை காணவில்லை என்று விக்னேஷ் போலீசாரிடம்  புகார் அளித்துள்ளனர். மேலும் தனது குழந்தை சஞ்சையின்  புகைப்படத்தை இணையதளங்களில் பதிவிட்டு தனது குழந்தை காணவில்லை, யாரவது பார்த்தல் கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த புகாரின் படி போலீசாரும், குடும்பத்தினரும் பல்வேறு இடங்களில்  விக்னேஷின் மூன்று வயது குழந்தை சஞ்சையை தேடி வந்துள்ளனர்

இந்நிலையில் போலீசார், எதிர் வீட்டு பெண்மணி ஆன தங்கம் என்ற பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் தெரிவித்த நிலையில் வீட்டில் சோதனை செய்தனர்.

பின்னர் வீட்டில் வந்து போலீசார் சோதனை நடத்திய போது வாஷிங்மெஷினில் குழந்தையை  சாக்கு மூட்டையில் கட்டி கொலை செய்துள்ளதாக தெரியவந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு ராதாபுரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

முதற்கட்டமாக,  விக்னேஷ் என்பவர் குடும்பத்திற்கும், எதிர்வீட்டு தங்கம் என்ற பெண்மணி குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என தெரிந்தது. இதன் அடிப்படையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என தெரியவந்துள்ளது.

பின்னர் தங்கம் என்ற பெண்மணியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் அந்த பகுதியில் அதிகமாக போலீசார்களை குவித்துள்ளனர்.

இந்த மூன்று வயது சிறுவனை கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The woman from the opposite house who killed a 3 year old boy and tied him in a sack Terrible in Nellai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->