திருமுல்லைவாயல் அருகே பரிதாபம்.! லாரி சக்கரத்தில் சிக்கி கணவர்-மகள் கண் முன்னே பெண் உயிரிழந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


திருமுல்லைவாயல் அருகே கணவர்-மகள் கண் முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி பாக்கிய லதா (50). இவர்களது மகள் ஷெலின் கில்டா. இந்நிலையில் இவர்கள் 3 பேரும் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். இதில் மோகன் தனியாக மோட்டார் சைக்கிளிலும், லதா தனது மகளுடன் மொபட்டிலும் சென்றுள்ளார்.

அப்பொழுது திருமுல்லைவாயல் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக செங்கலோடு ஏற்றி வந்த லாரி மொபட்டின் மீது மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி தாயும், மகளும் கீழே விழுந்துள்ளனர். இதில் சாலையில் விழுந்த லதா மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் மகள், கணவர் கண் முன்னே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The woman was trapped under the wheel of the lorry in thirumullaivoyal


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->