கடைக்கு வந்த வாலிபர்கள் பட்டப்பகலில் செய்த காரியம்.! கதறி துடித்த பெண்மணி.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்ற வில்லுக்குறி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு லதா எனும் மனைவி இருக்கின்றார். 

இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றார். இத்தகைய நிலையில், லதாவின் கடைக்கு பைக்கில் 2 வாலிபர்கள் வந்து சிகரெட் இருக்கிறதா என்று கேட்டு இருக்கின்றனர். 

இதன் காரணமாக, சிகரெட்டை எடுக்க லதா திரும்பிய நேரத்தில் ஒரு வாலிபர் லதாவுடைய கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்து லதா கத்தி சத்தமிட்டு இருக்கின்றார். 

இதனால், அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பின்னர், இதுகுறித்து லதா காவல்நிலையத்தில் புகாரளித்து இருக்கின்றார். அவரளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Theft In kanyakumari


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->