தமிழக அரசு பள்ளி ஆசிரியரின் ஸ்பெஷல் க்ளாஸ்.! மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.! ஆங்கில ஆசிரியர் கைது.! - Seithipunal
Seithipunal


திருக்கழுக்குன்றம் அருகே, அரசுப் பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் பாலியல் செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருக்கழுக்குன்றம் அடுத்த பாண்டூரில் தமிழக அரசின் உயர் நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் தர்மராஜ் (44 வயது). 

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆங்கில ஆசிரியர் தர்மராஜ், சிறப்பு வகுப்பு நடத்த உள்ளதாக கூறி மாணவிகளை பள்ளிக்கு அழைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அப்போது 2 மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தர்மராஜ் தொல்லை கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து மாணவிகள் இருவரும் செங்கல்பட்டு மாவட்ட சைல்டு லைன் அமைப்பினர் இடம், ஆசிரியர் தவறான தொடுதல் மற்றும் பாலியல் செயலில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், ஆங்கில ஆசிரியர் தர்மராஜ் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. 

இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் காவல் நிலைய, மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து மாமல்லபுரம் மகளிர் காவல் நிலைய போலீஸார், தர்மராஜ்-யை போக்சோ சட்டத்தில் கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THIRUKAZHUKUNDRAM TEACHER ARREST


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->