திருப்பூர் | ரூ.100 கோடி மோசடி செய்த கும்பல் கைது! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் தொழில் செய்யலாம் என வீட்டு பத்திரங்களை வாங்கி வைத்து ரூ.100 கோடி மோசடிசெய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்:

திருப்பூர்: பல்லடம் பணிக்கம்பட்டியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் அவரது நண்பர்கள், பலரிடம் சொத்து பத்திரத்தின் மூலம் கடன் பெற்று டெக்ஸ்டைல் தொழில் செய்யலாம் என ஆசை வார்த்தைகளால் பேசியுள்ளனர். 

பொதுமக்களும் இவர்களை நம்பி தங்களது சொத்து பத்திரங்களை கொடுத்துள்ளனர். இதன் மூலம் சிவகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சொத்து பத்திரங்களை வாங்கி வைத்து சுமார் ரூ.100 கோடி மோசடி செய்துள்ளனர். 

இவர்களால் பாதிக்கப்பட்ட போது மக்கள் அனைவரும் பல்லடம், திருப்பூர், ஊத்துக்குளி, உள்ளிட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.    

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, இந்த வழக்கில் சம்பத்தப்பட்ட பிரவீனா என்பவரை போலீசார் கைது செய்தனர்.  

மேலும்  தலைமறைவாக இருந்த, இந்த மோசடியில் முக்கியமான குற்றவாளி சிவகுமார் பல்லடத்தில் பதுங்கி இருப்பதாக தெரியவந்து போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thirupur rs100 crore cheating criminal arrest


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->