திருவள்ளுவர் பிறந்தநாள் சர்ச்சை - வைகாசி, அனுஷம் நட்சத்திரத்தில் கொண்டாடலாம் - உயர்நீதிமன்றம் அதிரடி! - Seithipunal
Seithipunal


வைகாசி மாசம், அனுஷம் நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்தார் என்றும், அன்றைய தினமே திருவள்ளுவர் தினமாக கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், திருவள்ளுவர் வைகாசி மாசம், அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்று, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ஆதாரங்கள் இல்லாததால் திருவள்ளுவர் பிறந்த நாளாக அறிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்றும், சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

அதே சமயத்தில், வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தை திருவள்ளுவர் பிறந்த தினமாக கொண்டாட எந்த தடையும் இல்லை என்றும், சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கு விசாரணையின் போது, திருவள்ளுவரைப் போற்றும் வகையில் தை மாதம் இரண்டாம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvalluvar Birthday Case Chennai HC Order


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->