உப்புநீக்கும் ஆலைக்கு டெண்டர் விடுவதற்கு முடிவு செய்துள்ள தமிழக அரசு - Seithipunal
Seithipunal


தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அமைக்கும் முயற்சியில், தூத்துக்குடி மாவட்டத்தில்  60 MLD உப்புநீக்கும் ஆலை அமைக்க தமிழக அரசு டெண்டர் விடவுள்ளது. இந்த திட்டம் ஹைபிரிட் வருடாந்திர மாதிரியின் கீழ் செயல்படுத்தப்படும். கூடிய சீக்கிரம் டெண்டர் விடப்படும் என சிப்காட் நிர்வாக இயக்குனர் டாக்டர் செந்தில் ராஜ் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் பல தொழில்களில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது, குறிப்பாக பசுமை ஹைட்ரஜன் துறையில், மேலும் தாமிரபரணி ஆற்றை பெரிதும் நம்பியுள்ள வறண்ட தென் மாவட்டத்தில் தனது தளத்தை அமைக்க தயாராகி வருகிறது. தூத்துக்குடி முள்ளக்காடு என்ற இடத்தில் 33.18 கி.மீ தூரத்திற்கு இந்த ஆலை இயங்கும் எனத் கூறப்பட்டுள்ளது. நீரின் மின்னாற்பகுப்பு பச்சை ஹைட்ரஜனை உருவாக்கும், ஒரு கிலோ பச்சை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய ஒன்பது லிட்டர் தண்ணீர் தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

1,000 கோடி செலவில் இத்திட்டம் அமைக்கப்படும் என சிப்காட் நிர்வாக இயக்குனர் டாக்டர் செந்தில் ராஜ் கூறியுள்ளார்.  இதைப்பற்றி கூறுகையில், நீர்த்தேக்கங்களில் இருந்து புதிய நீரை சேமிக்க விரும்புவதால், உப்பு நீக்கும் ஆலைகளில் அரசு கவனம் செலுத்துகிறது என்று ப்காட் நிர்வாக இயக்குனர் டாக்டர் செந்தில் ராஜ் கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thothukudi desalination facility for tender


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->