ஆளுநர் உரையுடன் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் துவக்கம்..!! - Seithipunal
Seithipunal


2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று துவங்க உள்ளது. இன்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள அரங்கில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த உரையில் தமிழக அரசின் சாதனைகள், தற்போதைய செயல்பாடுகள், வருங்கால திட்டங்கள், இலக்குகள், அறிவிப்புகள் குறித்து பேச உள்ளார். 

அதன் பிறகு மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி தலைவர்கள், பிரபலங்கள் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறும். இதனை அடுத்து சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டு அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். இந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு இன்று மாலைக்குள் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Assembly session begins today with Governor speech


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->