சென்னையில் மின்சார ரெயில்கள் திடீர் ரத்து - அவதியில் பயணிகள்.! - Seithipunal
Seithipunal


பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையம் இடையே இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால், அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- "சென்னை சென்டிரலில் இருந்து இன்று காலை 8.35, 10.15 மதியம் 12.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், சென்டிரலில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. 

இதேபோல், சூலூா்பேட்டையில் இருந்து இன்று மாலை 3.10 புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மின்சார ரெயிலும், சூலூர்பேட்டையில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. சென்டிரலில் இருந்து இன்று காலை 9, 9.30, 10.30, 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. 

கும்மிடிப்பூண்டியில் இருந்து இன்று காலை 11.25, மதியம் 12, 1, 2.30 மாலை 3.15 உள்ளிட்ட நேரங்களில் புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 9.40 மதியம் 12.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து இன்று காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

சூலூர்பேட்டையில் இருந்து இன்று மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக, நெல்லூரில் இருந்து இன்று மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. சூலூர்பேட்டையில் இருந்து இன்று காலை 11.45 மதியம் 1.15 மாலை 3.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

சென்டிரலில் இருந்து இன்று இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில்களும், செங்கல்பட்டில் இருந்து இன்று காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் நிறுத்தப்படும்.

கும்மிடிப்பூண்டியில் இருந்து இன்று மாலை 3 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கடற்ரையில் இருந்து புறப்பட்டு தாம்பரம் செல்லும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

today 23 electric train cancelled in chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->