ஈரோடு இடைத்தேர்தல் - நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. அதன்படி வேட்பு மனு தாக்கல் நேற்று முன் தினம் நிறைவு பெற்றது. இதில், திமுக, நாம் தமிழர் கட்சி உள்பட மொத்தம் 58 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் முடிவில் 55 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மூன்று பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில், நாளை வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னத்துடன் ஒதுக்கீடு செய்யப்பட்டு வெளியிடப்படும் என்றும், ஒரே சின்னத்தை ஏராளமானோர் கேட்டால், குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tomorrow final candidate list published for erode by election


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->