தொடர் விடுமுறை - பரனுர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்.! - Seithipunal
Seithipunal


இன்று நாடு முழுவதும் 78-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இன்று அரசு விடுமுறை என்பதால் நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்தால், அடுத்து சனி, ஞாயிறு விடுமுறைகள் என்று மொத்தம் 4 நாட்கள் தொடர் விடுமுறை என்று சென்னையில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தென் மாவட்டங்களை நோக்கிச் செல்லும் வாகனங்களால் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச் சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுங்கச் சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து காத்திருந்து பின்னர் கடந்து செல்கின்றன. 

இந்தப் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சுங்கச் சாவடியில் கூடுதலாக ஒரு கவுண்டர் துவங்கப்பட்டு வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதேபோன்று, பெரும்பாலான மின்சார ரெயில்கள் ரத்து காரணமாக, தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

traffic in chengalpat paranur tolgate


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->