தென்காசியில் மீண்டும் சோகம் : மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை எடுத்த விபரீத முடிவு - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியில் உள்ள காமாட்சி தெருவைச் சேர்ந்த செல்வகுமார்-ஜெயலட்சுமி என்ற தம்பதிக்கு 8 வயதில் அசோக் என்ற மகன் உள்ளார்.

அசோக் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, வீட்டில் இருந்து பள்ளிக்கு உணவு கொண்டு சென்ற அசோக், மதிய உணவை பள்ளியில் சாப்பிட்டுள்ளார். பின்னர் அவருக்கு  வாந்தி மயக்கம் ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்நிலையில் தனது 8 வயது மகன் இறப்பை தாங்கிக் கொள்ள  முடியாத அவரின் தந்தை செல்வகுமார், ஓடும் ரெயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். இதையடுத்து காயங்களுடன் செல்வகுமாரை மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படையினர்,

தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர். இந்த நிலையில் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிய செல்வகுமார், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து செல்வகுமாரின் உடலை மீட்ட போலீசார், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tragedy again in Tenkasi A tragic decision taken by a father who could not bear the grief of his sons death


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->