கஞ்சா விற்பனை - சென்னையில் சூடான் நாட்டைச் சேர்ந்த 2 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகளவில் உள்ளதனால் இதை தடுக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை பல்லாவரம் மற்றும் தாம்பரம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், 200-க்கும் மேற்பட்ட திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

அதன் படி சுமார் 28 இடங்களுக்கும் மேல் நடத்தப்பட்ட சோதனையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா, குட்கா மற்றும் இதர போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சூடான் நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், முகமது அல்ஸ்மானே என்பவர் விசா காலாவதி ஆகிய பின்னும் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருப்பது தெரிய வந்தது. இதேபோல், சேலையூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சோதனை மேற்கொண்டதில், நான்கு கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இந்த கஞ்சா விற்பனையில் தொடர்புடைய மற்ற கஞ்சா வியாபாரிகளையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two soodan country peoples arrested for kanja sales in chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->