அம்பேத்கர் படத்தை அகற்றிய திமுக நிர்வாகி..!! விசிக.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


அம்பேத்கர் புகைப்படத்தை அகற்றியதாக கூறி அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் சௌந்தரை கண்டித்து விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டினார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளராக இருப்பவர் சௌந்தர். இவருடைய மனைவி நிர்மலா ஒன்றிய குழு தலைவராக உள்ள நிலையில் அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் புகைப்படத்திற்கு அருகே இருந்த அம்பேத்கரின் புகைப்படத்தை அகற்றியதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றியிட்டு போராட்டம் நடத்தினர். அதேபோன்று சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மீண்டும் ஸ்டாலின் புகைப்படம் அருகே அம்பேத்கர் புகைப்படத்தை வைக்குமாறு உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் ஸ்டாலின் புகைப்படம் அருகே அம்பேத்கரின் புகைப்படம் வைக்கப்பட்டது. இதன் காரணமாக விசிகவினர் போராட்டத்தை கைவிட்டனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அம்பேத்கரின் புகைப்படம் அகற்றியது அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK volunteers road blockade as DMK leader removes Ambedkar photo


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->