வீடு புகுந்து பள்ளி மாணவியை கொலை செய்த நாடக காதலன்?! வேலூர் அருகே பெரும் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


வீடு புகுந்து பள்ளி மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்த நாடக காதலன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் நகர பகுதியை சேர்ந்தவர் பாரதிதாசன். இவரும் இவரின் மனைவியும் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறுவயதிலேயே இழந்த நிலையில், 16 வயதான மற்றொரு மகள் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

மாணவி அடிக்கடி தனது பாட்டி வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டு வந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ராம்குமார் (22 வயது) வாலிபருடன் பள்ளி மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் அந்த மாணவியை நாடக காதல் மூலம் வலையில் சிக்கவைத்துள்ளார்.

சம்பவத்தன்று (முதல்கட்ட தகவலின்படி) மாணவியின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்த நாடக காதலன் ராம்குமார், பள்ளி சிறுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நாடக காதலன் மாணவியின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்துள்ளார். 

இதனையடுத்து அந்த கயிற்றை கொண்டே ராம்குமாரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளான். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும், பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு தான்,  இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது ராம்குமார் மாணவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து முடிவுகள் வெளியாகும் என்று தெரியவருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vellore school girl murder


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->