விபச்சார தொழில் நடத்திய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி - கையும் களவுமாக பிடித்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


விபச்சார தொழில் நடத்திய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி - கையும் களவுமாக பிடித்த போலீசார்.!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் ஸ்பா இயங்கி வருகிறது. இதில் ஒரு ஸ்பாவில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் படி, திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று ஆய்வு நடத்தினர். அதில், ஷைன் ஸ்பா என்ற பெயரில் இயங்கிய ஸ்பாவில் கர்நாடகத்தை சேர்ந்த லட்சுமி தேவியுடன் இரு பெண்களும் இருந்துள்ளனர். 

இதையடுத்து போலீசார் அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் இந்த ஸ்பா அனுமதி இல்லாமல் கடந்த இரு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருவது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கிருந்த 2 பெண்களையும் அரசு காப்பகத்திற்கு அனுப்பி விட்டு, லட்சுமி தேவியை கைது செய்து விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில், இந்த ஸ்பா நிறுவனத்தை திருச்சி வயலூர் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் நடத்தி வருவதும், அவர் விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் என்பதும் தெரியவந்தது. 

பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் தலைமறைவான செந்திலை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் தலைமறைவான செந்திலை சென்னையில் வைத்து போலீஸார் நேற்று கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vijay makkal iyakkam excuetive arrested for prostitution in trichy


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->