மதுரை || கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சின்ன பாலமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி கருப்பாயி(25). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மனமுடைந்த கருப்பாயி வாழ்க்கையில் வெறுப்படைந்து, சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த கருப்பாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கருப்பாயின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலமேடு காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wife commits suicide in madurai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->