மனைவி பிரிந்து சென்றதால் கணவன் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தின் குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பாப்பன்மனையை சேர்ந்த இளமுருகன்-ராதா தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய திருமண வாழ்க்கையில் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனைவி ராதா கணவனிடம் கோபித்துக்கொண்டு தனது தந்தையின் வீட்டுக்கு சென்று உள்ளார்.

இதனால் மனைவியின் பிரிவை தாங்க முடியாத இளமுருகன் தன்னுடன் சேர்ந்து வாழ்வதற்கு அழைத்துள்ளார். ஆனால் ராதா நான் வரவில்லை என்று கூறிவிட்டதாக தெரிகிறது. மனைவி தனது முடிவில் உறுதியாக இருப்பதால் வாழ்வில் விரக்தி அடைந்த இளமுருகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wife go to mother house husband suicide


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->