#தர்மபுரி || கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை.! - Seithipunal
Seithipunal


தர்மபுரியில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் அருகே உள்ள மூக்காண்டபட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி தீபா (வயது 25). ரமேஷ் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து தீபா தர்மபுரி மாவட்டம் காட்டு செட்டிபட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று தங்கி இருந்துள்ளார். இந்நிலையிலே கணவன் இறந்ததால் மன வேதனையில் இருந்த தீபா, வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார்.

இதை பார்த்த குடும்பத்தினர் தீபாவை மீட்டு சிகிச்சைக்காக ராயக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தீபா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பஞ்சப்பள்ளி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife suicide in dharmapuri


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->