வளைகாப்பு நடத்த ஆசையாக கேட்ட காதல் மனைவி.. கரண்டியால் அடித்து கொலை செய்த கணவன்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரது மகன் அற்புதராஜ் (வயது 20), காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் விருத்தாசலத்தில் ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்த வடக்கு பெரியார் நகரைச் சேர்ந்த லதா மகள் சக்தி (வயது 18) என்பவரை காதலித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு முன்பே சக்தி கர்ப்பம் அடைந்திருந்தார். தற்போது 7 மாத கர்ப்பிணியான சக்தி, தனது தாய் லதா வீட்டில் தங்கியிருந்தார். அப்போது தனக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என தன்னுடைய கணவர் அற்புதராஜியிடம் ஆசையாக கேட்டுள்ளார்.

ஆனால் ஏற்கெனவே கடனில் சிக்கி தவிக்கும் அற்புதராஜ் அதற்கு சம்மதிக்கவில்லை. தற்போதுள்ள சூழலில் வளைகாப்பு நடத்த முடியாது என்று மறுத்து விட்டார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த சக்தி தனது செல்போன் அழைப்பை எடுக்கவில்லை என சக்தியின் தாய் லதாவிற்கு அற்புதராஜ் தகவல் கொடுத்துள்ளார்.

 அதனையடுத்து லதா உடனடியாக வீட்டுக்குச் சென்று பார்த்தபோது சக்தி சடலமாக கிடந்தார். அவரது முகம், கழுத்து ஆகிய இடங்களில் ரத்தக் காயங்கள் இருந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் சக்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சக்தியின் உடலில் இருந்த காயங்களின் அடிப்படையில் அவரை யாரேனும் கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அற்புதராஜை வரவழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது, தனது காதல் மனைவியை அற்புதராஜே அடித்துக் கொலைசெய்தது தெரியவந்தது. வளைகாப்பு நடத்த வேண்டும் என்று சண்டையிட்ட சக்தியை வீட்டில் கிடந்த சாரணிக் கரண்டியால் தாக்கியபோது அவர் மயங்கி விழுந்ததாகவும், மேலும் ஆத்திரத்தில், அவரது கழுத்து, முகம் ஆகிய பகுதியில் கையால் குத்தியதாகவும் தெரிவித்தார்.

 அவரை அப்படியே விட்டுவிட்டு வேலைக்கு சென்று விட்டதாகவும் தெரிவித்தார். பிறகு வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவர் பேச்சுமூச்சில்லாமல் கிடந்ததையடுத்து தனது மாமியார் லதாவுக்கு தகவல் தெரிவித்ததாகவும், அவர் வந்து பார்த்தபோது லதா இறந்து கிடந்ததாகவும் அற்புதராஜ் போலீசாரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அற்புதராஜை கைது செய்தனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife wanted to baby shower husband beat her to death


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->