குடும்ப பிரச்சனை காரணமாக ஆற்றுப்பாலத்திலிருந்து குதித்து பெண் தற்கொலை முயற்சி .. காவல்துறை விசாரணை..! - Seithipunal
Seithipunal


ஆற்று பாலத்தில் இருந்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 நாமக்கல் மாவட்டம் ஆவத்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவர் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் அங்குள்ள பாலத்திலிருந்து, காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள்  தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தவரை மீட்டனர். மேலும், வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த இளைஞர் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman attempts suicide in Erode


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->