அடிக்கடி தகராறு.. பெண் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் குப்புக்கல் மேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி பாரதி (30). இந்நிலையில் கணவன்-மனைவியிடைய அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து இவர்களிடையே நேற்று முன்தினமும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனை அடைந்த பாரதி வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாணாவரம் போலீசார், பாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman commits suicide in ranipet


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->