தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.. மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் போராட்டம்..! - Seithipunal
Seithipunal


தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் வட்டாசியரை முற்றுகையிட்டனர்.

சேலம் மாவட்டம் கோவிந்த ராஜ பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்.  இவருக்கு சசிகலா என்ற மனைவி இருக்கிறார்.இந்த தம்பதிக்கு  இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சசிகலா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரின் உறவினர்களுக்கு தெரியாமல் ஜெயகுமார் அடக்கம் செய்ய முயன்றுள்ளார்.

இதனை அறிந்த அவரது உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து  வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சசிகலாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர்.

மேலும், வட்டாசியரை முற்றுகையிட்டனர். அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் ஜெயகுமாரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் சசிகலாவின் உடலை பெற்றுகொள்ள உப்புகொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Committed Suicide Salem


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->