2 ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் இரண்டு ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நெல்லை மாவட்டம் திரிகூடபுரம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி முனியம்மாள் (32). இவர் அப்பதியில் உள்ள மாட்டு எலும்பு அரவை தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் முனியம்மாள் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்கு அந்த வழியாக வந்த ஆட்டோவில் சென்றுள்ளார்.

அப்பொழுது ஆய்க்குடி பகுதி அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு ஆட்டோவும், முனியம்மாள் சென்ற ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது. இதில் ஆட்டோவின் கம்பி முனியம்மாளின் கழுத்தில் குத்தி பலத்த காயமடைந்துள்ளார்.

இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முனியம்மாள் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ஆய்க்குடி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman killed in 2 auto head on collision in thenkasi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->