வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சோகத்தில் குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டையில் விவசாயியின் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செல்வமந்தை கிராமத்தில் விவசாயியான வினோத்குமார் (வயது 30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு புவனேஸ்வரி (வயது 22) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி தனது கணவர் விவசாய நிலத்திற்கு சென்ற பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த வினோத் குமார் தனது மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women suicide for against husband fight


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->