தேனி || திடீரென இடிந்து விழுந்த அரசு மருத்துவமனை கட்டிடம் - நொடியில் பறிபோன தொழிலாளி உயிர்.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்காக புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று திடீரென இடிந்து விபத்துக்குள்ளானது.

இந்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக தொழிலாளிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்தத் தகவலின் படி போலீசார் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

தொடர்ந்து உயிரிழந்தவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

worker died due to govt hospital building collapse in theni


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->