இருசக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே கார்ணாம்பூண்டியை சேர்ந்தவர் தொழிலாளி கனகராஜ் (40). இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கனகராஜ் உறவினரை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் களஸ்தம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது கழிக்குளம் கிராமம் ஏரிக்கரை பகுதி அருகே, சாலையின் நடுவில் பாலம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்ததை கவனிக்காமல் கனகராஜ் நிலைத்தடுமாறி பள்ளத்தில் விழுந்துள்ளார்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் கனகராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே கனகராஜ் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கீழ்பென்னாத்தூர் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worker dies after falling into ditch from twowheeler


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->