மனவேதனையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் மனவேதனையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி குளுமைக்காடு பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி செல்வராஜ்(55). இவரது மனைவி துளசி, கடந்த வருடம் உடல்நல குறைவால் உயிரிழந்துவிட்டார்.

இதனால் செல்வராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மது குடித்து வந்துள்ளார். இதனை செல்வராஜின் உறவினர்கள் கண்டித்து உள்ளனர். இதனால் நேற்று முன்தினம் மனவேதனையில் செல்வராஜ் தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடைத்து மயங்கி கிடந்துள்ளார்.

இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து இரணியல் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worker suicide in kanniyakumari


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->