திருநங்கையாக மாறிய மகனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோர்.. குவியும் வாழ்த்துக்கள்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் விருதாச்சலம் இந்திரா நகரை சேர்ந்தவர் கொளஞ்சி, இவரது மனைவி அமுதா. இந்த தம்பதியினருக்கு 21 வயதில் நிஷாந்த் என்ற மகன் உள்ளார். இவர் டிப்ளமோ கேட்டரிங் முடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிஷாந்த் தன் உடலின் பாலியல் செயல்பாடுகள் மாற தான் ஒரு திருநங்கை என்பதை அவர் உணர்ந்துள்ளார். உடனே வீட்டை விட்டு வெளியேறி திருநங்கைகளிடம் தஞ்சம் அடைந்த இவர் தனது பெயரை நிஷா என மாற்றிக் கொண்டுள்ளார்.

இந்தநிலையில் நிஷாவின் உணர்வுக்கு மதிப்பளித்து, யதார்த்தத்தை உணர்ந்த அவரது பெற்றோர் நிஷாவை வீட்டுக்கு அழைத்து பின்னர் அவருக்கு பாலியல் மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது முழுமையான திருநங்கையாக நிஷா மாறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று அவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தி நிஷாவை மங்கையாக அவரது பெற்றோர் அங்கீகரித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், தனது மகனை திருநங்கையாக ஏற்றுக்கொண்டு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yellow bathing ceremony for their transgender son


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->