சதீஸ்கர்: கடன் தொல்லையால் இளம் தம்பதி எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


கடன் தொல்லையால் இளம் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்திலுள்ள ஜான்ஜிகிரி பகுதியில் சுஷில் யாதவ்(35) - அனிதா(33) தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா காரணமாக சுஷிலுக்கு வேலை இல்லை. இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் அதே பகுதியில் உள்ள வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தனர்.

இந்நிலையில், நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டு கதவு திறக்கபடாததால் அந்த வீட்டின் உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர்கள் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளனர்.

அவர்களின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முன் அவர்கள் எழுதி வைத்த கடிதம் சிக்கியது. அதில், கடன்தொல்லை, வேலையின்மையால் தற்கொலை செய்து கொண்டதாக எழுதி வைத்திருந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young Couple Comitted Suicide


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->