சென்னை || திருமணமான இரண்டே நாளில் இளம்பெண் சடலமாக மீட்பு.. காவல்துறை தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


திருமணமான இரண்டே நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, பூந்தமல்லி முத்துக்குமரன் நகரைச் சேர்ந்தவர் அனிதா (26). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில், தன்னுடன் வேலைபார்க்கும் உதயா என்பவரை புதன்கிழமை  திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், அவர் வெள்ளிகிழமை காலை சடலமாக மீட்கப்பட்டார். அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் திருவள்ளூர் ஆர்டிஓ தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னரே அவரின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும் திருமணமான இரண்டே நாளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young Girl Found Dead In Chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->