9ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை.. காமகொடூரன் மீது பாய்ந்து போக்சோ..! - Seithipunal
Seithipunal


மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். அவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில்,  அதே பகுதியை சேர்ந்த கோபி (வயது 20) என்பவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், அதனை யாரிடமும் கூறக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார். இதனை அடுத்து சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் பெற்றோர் இது குறித்து கேட்ட போது தனக்கு நடந்த கொடுமையை பற்றி கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கோபி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth arrested In POCSO Near Thirupaththur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->